மிரண்டு ஓடிய யானைமுதுகில் அமர்ந்தவர்களுக்கு ஏற்பட்ட கதிஅலறியடித்து ஓடிய திருவிழா கூட்டம்

Update: 2024-02-13 10:48 GMT

கேரள மாநிலம் மலப்புரத்தில் திருவிழாவின் போது யானை மிரண்டு ஓடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சங்கரம்குளம் சந்தனக்கூடம் திருவிழாவிற்காக, கண்ணன் என்ற யானை கொண்டு வரப்பட்டு திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர். அப்போது, கூட்டத்தில் திடீரென யானை மிரண்டு ஓடியதால், அங்கிருந்த பொதுமக்கள் ஓட்டம் பிடித்தனர். இதில், யானை மீது அமர்ந்திருந்த 3 பேர் கீழே விழுந்து காயம் அடைந்தனர். பின்னர், நீண்ட நேர போராட்டத்துக்குப் பின், பாகன்கள் யானையை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்..

Tags:    

மேலும் செய்திகள்