"அயோத்தி கோயிலுக்காக புதுவை ஜிப்மரை மூட வந்த உத்தரவு" - இன்று விசாரிக்கும் ஐகோர்ட்

Update: 2024-01-21 05:30 GMT

ராமர் கோவில் குடமுழுக்கை ஒட்டி, வரும் திங்கட்கிழமை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையை பிற்பகல் 2:30 மணி வரை மூட எதிர்ப்பு தெரிவித்து, தாக்கல் செய்யப்பட்ட அவசர வழக்கை, சென்னை உயர் நீதிமன்றம் இன்று விசாரிக்க உள்ளது.மத்திய அரசின் இந்த அறிவிப்பை ரத்து செய்து மருத்துவமனையை மூடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று, புதுச்சேரி முதலியார்பேட்டையைச் சேர்ந்த ராஜா என்பவர் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார். அதில், மருத்துவமனை மூடப்படுவதால், மருத்துவ பரிசோதனைகளுக்கு தேதி பெற்றவர்கள் மற்றும் மகப்பேறு அறுவை சிகிச்சைக்காக தேதி நிர்ணயிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்கள் பாதிக்கப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, மருத்துவமனையை மூட வேண்டாம் எனக் கூறி மத்திய அரசுக்கும், மருத்துவமனை நிர்வாகத்துக்கும் மனு அனுப்பியும் எந்த பதிலும் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த பொது நல மனுவை தலைமை நீதிபதி சஞ்சய் கங்காபுர்வாலா, நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு இன்று காலை விசாரிக்க உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்