ISIS தீவிரவாத இயக்க இந்திய தலைவருக்கு அசாமில் காத்திருந்த அதிர்ச்சி

Update: 2024-03-21 09:37 GMT

அசாம் மாநிலத்தின் துப்ரி மாவட்டத்தில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் இந்திய பிரிவு தலைவர் மற்றும் அவரது கூட்டாளி கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பை சேர்ந்த இருவர் அசாமில் ஊடுருவியுள்ளதாக அம்மாநில காவல் துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து சிறப்பு படைப் பிரிவு அதிகாரிகள் துப்ரியில் தேடுதல் பணியை மேற்கொண்டனர். அப்போது, ஹரிஸ் ஃபருக்கி என்கிற ஹரிஸ் அஜ்மல் ஃபருக்கி மற்றும் அனுராக் சிங் என்கிற ரெஹான் ஆகிய இருவரை கைது செய்தனர்.

இதில் ஃபருக்கி, ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் இந்திய பிரிவு தலைவர் என தெரியவந்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்