ஒற்றை வீடியோவால் குஜராத்தில் வெடித்த சர்ச்சை...தேர்தல் செல்லாது - தேர்தல் ஆணையம் அதிரடி

Update: 2024-05-10 05:35 GMT

மகிசாகர் மாவட்டத்தில் சாந்த்ராம்பூர் தாலுகாவில் உள்ள பார்த்தம்பூர் வாக்குச்சாவடியில் மே 7ஆம் தேதி ஒருவர் வாக்களிப்பதை நேரடியாக ஒளிபரப்பிய வீடியோ வெளியாகி சர்ச்சையானது. இந்த சம்பவம் தொடர்பாக 4 தேர்தல் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். முறைகேடுகள் தொடர்பாக தேர்தல் அதிகாரி மற்றும் பார்வையாளர் சமர்ப்பித்த அறிக்கையை கணக்கில் கொண்டு வாக்குப்பதிவு செல்லாது என அறிவிக்கப்பட்டது. அதனால் மே 11ஆம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை, இந்த வாக்குச்சாவடியில் புதிய வாக்குப்பதிவு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்