திருப்பதிக்கு விசிட் அடித்த கரடியார்
திருப்பதி மலையில் இரவு நேரத்தில் கோயிலுக்கு கரடி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பதி மலையில் உள்ள பாலாஜி நகர் குடியிருப்பில் பாலகங்கம்மா கோவில் என்ற பெயரில் அம்மன் கோவில் உள்ளது. வனப்பகுதியை ஒட்டியுள்ள அந்த கோவிலுக்கு உள்ளூர் பக்தர்கள் தினமும் சென்று வருகிறார்கள். இந்நிலையில், வனப்பகுதியில் இருந்து வந்த கரடி ஒன்று, பாலகங்கம்மா கோவில் பகுதியில் சுற்றும் முற்றும் பார்த்து விட்டு, பின்னர் வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது.