முதல்வர் அதிரடி கைது.. - டெல்லியில் வெடித்த போராட்டம்..- களத்தில் குதித்த பஞ்சாப் முதல்வர்..

Update: 2024-03-23 10:20 GMT

அரவிந்த் கெஜ்ரிவால் கைதை கண்டித்து, டெல்லி ஷாகிதி பூங்காவில் ஆம் ஆத்மி கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சியினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் டெல்லி அமைச்சர்கள், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் உள்ளிட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்