ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் - எங்க தெரியுமா?.. வெளியான முக்கிய தகவல்

Update: 2024-04-23 02:31 GMT

தொழில் அதிபர் முகேஷ் அம்பானி- நீடா அம்பானி தம்பதியின் 2-வது மகன் ஆனந்த் அம்பானி. இவருக்கும் ராதிகா மெர்ச்சன்ட்டிற்கும் ஜூலை மாதம் 12-ந்தேதி திருமணம் நடைபெற இருக்கிறது. நிச்சயதார்த்த விழாவில் ஜனவரி 19-ம் தேதி மும்பையில் உள்ள அவர்களது இல்லத்தில் நடைபெற்றது. இதையடுத்து, கடந்த மார்ச் மாதம் குஜராத் மாநிலம் ஜாம்நகரில் திருமணத்திற்கு முந்தைய விழா பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் ஏராளமான பிரபலங்கள் பங்கேற்றனர். இந்த நிலையில், ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் தம்பதிக்கு லண்டனில் ஜூலை மாதம் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அங்குள்ள ஸ்டோக் பார்க் எஸ்டேட்டில், திருமணம் நடைபெற உள்ளதாகவும்,3 நாட்கள் விழா நடைபெறும் வகையில் ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக, தகவல்கள் வெளியாகி உள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்