திருமலை மலைப்பாதையில் முகாமிட்டுள்ள யானைகள் : வாகன ஓட்டிகள் அச்சம்

திருப்பதி திருமலை மலைப்பாதையில் யானைகள் கூட்டம் முகாமிட்டுள்ள நிலையில் அதனை விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

Update: 2022-03-23 03:35 GMT
திருப்பதி திருமலை இரண்டாவது மலைப்பாதையில் யானை கூட்டம் முகாமிட்டுள்ளது. வாகனஓட்டிகள் இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து, வனத்துறையினர் யானை கூட்டத்தை வனப்பகுதிக்கு விரட்டும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். மேலும் யானைகள் கூட்டம் சாலை பகுதிகளுக்கு வராமல் இருக்க ரோந்து வாகனம் மூலம் சைரன் ஒலி எழுப்பப்பட்டு வருகிறது. திருப்பதியில் இருந்து திருமலைக்கு பக்தர்கள் நடந்து செல்லும் வழி அருகில் உள்ள நிலையில் அப்பகுதியில் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்