பல்கலைக்கழகத்தில் புதிய அருங்காட்சியகம் - வரலாற்று சுவடுகள் இடம்பிடிப்பு

பல்கலைக்கழகத்தில் புதிய அருங்காட்சியகம் - வரலாற்று சுவடுகள் இடம்பிடிப்பு

Update: 2021-09-12 12:00 GMT
பல்கலைக்கழகத்தில் புதிய அருங்காட்சியகம் - வரலாற்று சுவடுகள் இடம்பிடிப்பு 

மலையாள மொழியின் வரலாறு மற்றும் கேரள கலாசாரத்தை ஆவணப்படுத்தும் விதமாக காலடியில் உள்ள பல்கலைக் கழகத்தில் புதிய அருங்காட்சியகம் திறக்கப்பட்டுள்ளது.கேரளாவின் காலடியில் உள்ள ஸ்ரீ சங்கராச்சார்யா சமஸ்கிருத பல்கலைக் கழகம் சார்பில் மலையாள மொழி வரலாறு, கலாச்சாரங்களை ஆவணப்படுத்தும் பணியில் ஈடுபட்டது. வரலாற்று சுவடுகள், இலக்கியங்கள், கலைப்பொருட்கள் ஆகியவற்றை உள்ளடக்கி இந்த அருங்காட்சியகம் கட்டப்பட்டுள்ளது. மக்களை கவரும் விதத்தில் இந்திரஜித் என்பவர் பல்கலைக்கழக நிர்காவத்துடன் இணைந்து பொதுமக்களை கவரும் விதத்தில் பொருட்களை காட்சிப் படுத்தியுள்ளார். கொரோனா பரவல் காரணமாக பொதுமக்கள் வருகைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், வருங்காலத்தில் அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் முதன்முறையாக பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் அருங்காட்சியம் என்ற சிறப்பையும் பெற்றுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்