பெங்களூருவில் சாலை தடுப்பில் கார் மோதி பயங்கர விபத்து - 7 பேர் உயிரிழப்பு

கர்நாடகா மாநிலம் கோரமங்களா பகுதியில் நிகழ்ந்த சாலை விபத்தில், ஓசூர் எம்எல்ஏ மகன் உள்பட ஏழு பேர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

Update: 2021-08-31 05:23 GMT
கர்நாடகா மாநிலம் கோரமங்களா பகுதியில் நிகழ்ந்த சாலை விபத்தில், ஓசூர் எம்எல்ஏ மகன் உள்பட ஏழு பேர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஓசூர் எம்எல்ஏ பிரகாஷின் மகன் கருணாசாகர், கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் இருந்து தனது நண்பர்களுடன் காரில் ஓசூர் வந்து கொண்டிருந்தார். கோரமங்களா அருகே வந்த போது, சாலையின் நடுவே அமைக்கப்பட்டிருந்த தடுப்பில் கார் மீது மோதி, விபத்துக்குள்ளானது. இதில், கருணாசாகர், பெண்கள் மூவர் உள்பட ஏழு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த ஆடுகோடி போலீசார், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்