ஹமாஸ் தாக்குதலில் கேரள பெண் உயிரிழப்பு; விமானம் மூலம் டெல்லி கொண்டுவரப்பட்ட உடல்
ஹமாஸ் தாக்குதலில் கேரள பெண் உயிரிழப்பு. விமானம் மூலம் டெல்லி கொண்டுவரப்பட்ட உடல் - மத்திய அமைச்சர், இஸ்ரேல் தூதர் அஞ்சலி
இஸ்ரேல் மீது ஹமாஸ் இயக்கம் நடத்திய ராக்கெட் தாக்குதலில் பலியான கேரள செவிலியர் உடல் விமானம் மூலம் டெல்லி கொண்டு வரப்பட்டது. கடந்த 12 ஆம் தேதி நடந்த தாக்குதலில் இஸ்ரேலில் பணியாற்றி வந்த இடுக்கி மாவட்டத்தை சேர்ந்த சௌமியா என்ற பெண் உயிரிழந்தார். இந்நிலையில் டெல்லி கொண்டுவரப்பட்ட அவரது உடலுக்கு மத்திய அமைச்சர் முரளிதரன் மற்றும் இஸ்ரேல் நாட்டு தூதர் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.