இஸ்ரேலில் உயிரிழந்த கேரளப் பெண்; உடலை கொண்டு வர உதவுங்கள் - குடும்பத்தினர் அரசுக்கு கோரிக்கை

இஸ்ரேலில் உயிரிழந்த கேரளப் பெண்ணின் உடலை கொண்டு வர, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Update: 2021-05-14 06:24 GMT
இஸ்ரேலில் உயிரிழந்த கேரளப் பெண்ணின் உடலை கொண்டு வர, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்து உள்ளனர். இஸ்ரேல் - பாலஸ்தீனத்துக்கு இடையேயான மோதலின்போது நடந்த வான்வழி தாக்குதலில், அங்கு வசித்து வந்த கேரளாவை சேர்ந்த சவுமியா என்பவர் உயிரிழந்தார். இந்நிலையில், உயிரிழந்த சவுமியாவின் கணவர் சந்தோஷ், தன் மனைவியின் உடலை பாதுகாப்பாக கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்