பட்டியலின சிறுமிகள் இருவர் உயிரிழப்பு... வயல் பரப்பில் இருந்து மீட்கப்பட்ட உடல்கள்

உத்தரப்பிரதேசத்தில் வயல் பரப்பில் பட்டியலின சிறுமிகள் இருவரின் உடல்கள் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளன

Update: 2021-02-18 13:28 GMT
உத்தரப்பிரதேசத்தில் வயல் பரப்பில் பட்டியலின சிறுமிகள் இருவரின் உடல்கள் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளன.

உன்னாவ் பகுதியில் கால்நடைகளுக்கு உணவு சேகரிப்பதற்காக 16 வயது மற்றும் 17வயது சிறுமிகள் சென்றுள்ளனர். அவர்களுடன் 13 வயதான உறவுக்கார சிறுமியும் சென்றுள்ளார். அவர்கள் நீண்ட நேரம் ஆகியும் திரும்பி வராததால் அவர்களை பெற்றோர்கள் தேடியுள்ளனர். அப்போது வயல் பரப்பில் மூன்று சிறுமிகளும் கை கால்கள் துணியால் கட்டப்பட்டு மயங்கிய நிலையில் கிடந்துள்ளனர். அவர்களை பொதுமக்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதில் 2 சிறுமிகள் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். உயிருடன் இருந்த17 வயது சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிறுமிகளின் உயிரிழப்புக்கு காரணம் என்ன என்பது குறித்து பிரேத பரிசோதனைக்கு பின்பே தெரிய வரும் என போலீசார் தெரிவித்துள்ளனர். 
Tags:    

மேலும் செய்திகள்