சாலையில் பொருத்தப்பட்டிருந்த முள்தளங்கள் அகற்றிய விவசாயிகள்

டெல்லியின் எல்லைப்பகுதியில் அமைந்துள்ள காசிப்பூரில், விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Update: 2021-02-04 10:33 GMT
டெல்லியின் எல்லைப்பகுதியில் அமைந்துள்ள காசிப்பூரில், விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் போராட்டம் நடத்தி எல்லைப்பகுதியில், ஆணிகள் பொருத்தப்பட்ட இரும்பு பலகைகள் இருந்துள்ளது. இதனை போராட்டக்காரர்கள் ஒவ்வொன்றாக அகற்றியுள்ளனர். இந்த வீடியோ காட்சி, சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இது குறித்து விளக்கம் அளித்துள்ள டெல்லி போலீசார், எல்லைப்பகுதியில் முன்பு எப்படி இருந்ததோ அதே போன்று தான் தற்போதும் உள்ளதாகவும், ஆணி பலகைகளை அகற்றும் போது எடுக்கப்பட்ட வீடியோ அது என, விளக்கம் அளித்துள்ளனர். 
Tags:    

மேலும் செய்திகள்