அசாமில் அமைதி - ஊரடங்கு உத்தரவு தளர்வு

அசாம் மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவு, இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தளர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2019-12-14 06:54 GMT
அசாம் மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவு, இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தளர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குடியுரிமை சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நாளில் இருந்து, கவுகாத்தி உள்ளிட்ட அசாம் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் வெடித்தது. வன்முறை, கலவரம் என அசாதாரண சூழல் நிலவியதால், கடந்த வியாழனன்று, அசாமின் 10 மாவட்டங்களில், 48 மணி நேர ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இந்த நிலையில் படிப்படியாக அமைதி திரும்பி வருவதால், இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படுவதாக, அரசுத் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்