போலீஸ் அகாடெமியில் பயிற்சி நிறைவு விழா : அணிவகுப்பு மரியாதையை ஏற்றார் பினராயி விஜயன்
பொதுமக்கள்தான் தங்கள் எஜமானர் என்ற சிந்தனை காவல்துறையினருக்கு எப்போதும் இருக்க வேண்டும் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள்தான் தங்கள் எஜமானர் என்ற சிந்தனை காவல்துறையினருக்கு எப்போதும் இருக்க வேண்டும் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். திருச்சூரில் உள்ள போலீஸ் அகாடமியில் பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது. இதில், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கலந்து கொண்டு அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார். சிறப்பாக பயிற்சி முடித்தவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டிய அவர் , பின்னர் பேசும் போது, பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு உதவி செய்து அவர்களது நம்பிக்கையை பெறுவது காவல்துறையினரின் முக்கிய கடமை என்றும் கூறினார்.