"திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவில் உறுப்பினராக சேகர் ரெட்டி, மீண்டும் நியமனம்"

திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினராக சேகர் ரெட்டி மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

Update: 2019-09-19 21:52 GMT
தமிழகத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏ குமரகுரு உட்பட 29 பேரை அறங்காவலர் குழுவில் ஆந்திர மாநில அரசு ஏற்கெனவே நியமித்திருந்தது. இந்நிலையில், அறங்காவலர் குழுவில் சேகர் ரெட்டிக்கு முக்கிய தீர்மானங்கள் மீது வாக்களிக்கும் உரிமை இல்லாத சிறப்பு அழைப்பாளர் பதவியை ஆந்திர அரசு வழங்கியுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் சிபிஐயால் கைது செய்யப்பட்டு , அறங்காவலர் குழு உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட சேகர் ரெட்டிக்கு மீண்டும் பதவி வழங்கப்பட்டிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்