பாகிஸ்தான் வான் எல்லையில் மோடி விமானத்துக்கு தடை
பாகிஸ்தான் வான் எல்லையில், பிரதமர் மோடி விமானம் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் வான் எல்லையில், பிரதமர் மோடி விமானம் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வரும் 21 ஆம் தேதி பிரதமர் மோடி அமெரிக்கா செல்ல உள்ள நிலையில், பாகிஸ்தான் வான் எல்லையை பயன்படுத்த இந்தியா சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் இந்தியாவின் கோரிக்கையை நிராகரிப்பதாக பாகிஸ்தான் வெளியுறவு துறை அமைச்சர் ஷா முகமது குரோஷி அறிவித்துள்ளார்.