தெலங்கானா : 6 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு - பதவி பிரமாணம் செய்து வைத்தார் ஆளுநர் தமிழிசை

தெலங்கானா ஆளுநராக பதவியேற்றதும் முதல் பணியாக, ஆறு அமைச்சர்களுக்கு, தமிழிசை பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

Update: 2019-09-09 02:26 GMT
தெலங்கானா ஆளுநராக பதவியேற்றதும் முதல் பணியாக, ஆறு அமைச்சர்களுக்கு, தமிழிசை பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். தெலங்கானா மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவின் மகன் ராமா ராவ், சந்திரசேகர ராவின் மருமகன் ஹரீஷ் ராவ், மகேஸ்வரம் தொகுதி எம்.எல்.ஏ சபிதா இந்திரா ரெட்டி, கரீம் நகர் எம்.எல்.ஏ. கங்குலா கமலக்கர், கம்மம் எம்.எல்.ஏ. அஜய் குமார், மற்றும் சட்ட மேலவை உறுப்பினரான சத்யவதி ரத்தோடு ஆகிய 6 பேரும் புதிய அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். ஐதராபாத்தில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் இவர்கள் 6 பேருக்கும் புதிய ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன், பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
Tags:    

மேலும் செய்திகள்