இந்தூரில் பள்ளி மாணவர்களுக்கு விஷமான உணவு : 20 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி

மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் இயங்கி வரும் தனியார் பள்ளியில், உணவு சாப்பிட்ட 20 குழந்தைகளுக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.

Update: 2019-09-05 03:22 GMT
மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் இயங்கி வரும் தனியார் பள்ளியில், உணவு சாப்பிட்ட 20 குழந்தைகளுக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. மாணவர்களின் உடல்நிலை மோசமானதை பார்த்த ஆசிரியர்கள் பள்ளி நிர்வாகத்திற்கு தகவல் அளித்தனர். உடனடியாக 20 மாணவர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றனர். உணவு விஷமானது குறித்து மாவட்ட சுகாதாரத்துறை அந்த பள்ளி நிர்வாகத்திடம் விசாரணை மேற்கொண்டு வருகிறது. 
Tags:    

மேலும் செய்திகள்