திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வி.ஐ.பி. தரிசனத்திற்கு கட்டுப்பாடு - அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தற்போது நடைமுறையில் உள்ள வி.ஐ.பி.தரிசன முறை ரத்து செய்யப்படும் என அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி கூறியுள்ளார்.

Update: 2019-07-14 00:31 GMT
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தற்போது நடைமுறையில் உள்ள வி.ஐ.பி. தரிசன முறை ரத்து செய்யப்படும் என அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி கூறியுள்ளார். ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே விஐபி தரிசனத்திற்கு வழிவகை செய்யப்படும் என்றும், விரைவில் அது நடைமுறைக்கு வரும் என்றும் அவர் குறிப்பிட்டார். பொது பக்தர்கள் தரிசனத்துக்கு ஏற்படும் இடையூறுகள் இந்த புதிய நடைமுறை மூலம் தவிர்க்கப்படும் என்று சுப்பாரெட்டி தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்