ஆந்திராவில் ஊருக்குள் புகுந்த கரடியால், பொதுமக்கள் பீதி

ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டத்தில் உள்ள வெலுகொண்டா கிராமத்துக்குள் புகுந்த கரடி பொதுமக்களை அச்சுறுத்தி வந்தது.

Update: 2019-06-25 07:41 GMT
ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டத்தில் உள்ள வெலுகொண்டா கிராமத்துக்குள் புகுந்த கரடி பொதுமக்களை அச்சுறுத்தி வந்தது.
இதனையடுத்து கிராமமக்கள் ஒன்று சேர்ந்து, தீப்பந்தங்களை ஏந்தி, கரடியை விரட்டினர். இதனால் அச்சம் அடைந்த கரடி அங்கிருந்த மரத்தின் மேல் ஏறி அமர்ந்தது. இந்த நிலையில் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், பொதுமக்களுடன் சேர்ந்து பட்டாசுகளை வெடித்து, கரடியை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்