பீகாரில் மக்களவை தேர்தலில் களமிறங்கும் கன்னய்யா குமார்...

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக முன்னாள் மாணவர் தலைவர் கன்னய்யா குமார் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார்.

Update: 2019-04-25 20:01 GMT
பிற்படுத்தப்பட்ட பட்டியலின மாணவர்களின் நலனுக்காகவும் பல்கலைக்கழக மாணவர்களின் மரணம் தொடர்பாகவும் குரல் கொடுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்த அவர் அண்மையில் தமது ஆய்வு படிப்பை நிறைவு செய்து டாக்டர் பட்டம் பெற்றுள்ளார். இந்நிலையில் பீகார் மாநிலத்தில் உள்ள பெகுசராய் தொகுதியில் கன்னையா குமார் களமிறங்குகிறார். தான் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை உள்ளதாக கூறியுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்