புதிய இந்தியாவை கட்டமைப்பதில் மகளிர் பங்களிப்பு அளப்பறியது - பிரதமர் நரேந்திர மோடி புகழாரம்

புதிய இந்தியாவை கட்டமைப்பதில் மகளிரின் பங்களிப்பு அளப்பறியது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

Update: 2019-03-08 17:58 GMT
புதிய இந்தியாவை கட்டமைப்பதில் மகளிரின் பங்களிப்பு அளப்பறியது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி,  புதிய இந்தியாவின் கலாச்சாரத்தை உருவாக்குவதில் பெண்களின் பங்கு மிக அவசியம் என்று  கூறினார். ராணுவத்தின் சில துறைகளில் பெண்களுக்கு நிரந்தர பணி வழங்க அண்மையில் முடிவு செய்யப்பட்டதையும் சுட்டிக்காட்டினார்.   ராணுவ போர் விமானங்களில் பெண்களும் பறப்பதாக பிரதமர் மோடி பெருமிதத்துடன் தெரிவித்தார். முன்னதாக வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்தில்  தரிசனம் செய்தார்.  
Tags:    

மேலும் செய்திகள்