சிபிஐ இயக்குநர் நியமனம் தொடர்பான வழக்கு : தலைமை நீதிபதி விசாரணை அமர்வில் இருந்து விலகல்

புதிய சிபிஐ இயக்குநர் நாகேஸ்வர ராய் நியமனத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின், விசாரணை அமர்வில் இருந்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் திடீரென விலகியுள்ளார்.

Update: 2019-01-21 07:21 GMT
புதிய சிபிஐ இயக்குநர் நாகேஸ்வர ராய் நியமனத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின், விசாரணை அமர்வில் இருந்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் திடீரென விலகியுள்ளார். வரும் 24ஆம் தேதி பிரதமர் தலைமையில் நடைபெற உள்ள புதிய சிபிஐ இயக்குனரை தேர்வு செய்வதற்கான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க உள்ளதால், இதிலிருந்து விலகியிருப்பதாக அவர் விளக்கம் அளித்துள்ளார். நாகேஸ்வர ராவுக்கு எதிரான வழக்கு, 2-வது நீதிபதி அமர்வு விசாரிக்கும் எனவும் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தெரிவித்துள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்