தன் அண்ணன் மகனுக்கு கட்சியில் வாய்ப்பு - பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி அறிவிப்பு

தன் அண்ணன் மகன் ஆகாஷை கட்சியில் இணைக்கப்போவதாக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி அறிவித்துள்ளார்.

Update: 2019-01-17 17:40 GMT
தன் அண்ணன் மகன் ஆகாஷை கட்சியில் இணைக்கப்போவதாக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி அறிவித்துள்ளார். சமீபத்தில் அவரின் பிறந்த நாளன்று, அவருடன் ஆகாஷ் நிற்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி பரபரப்பை கிளப்பியது. இந்நிலையில், தனது அண்ணன் மகன் ஆகாஷை கட்சியில் சேர்த்து, அரசியல் கற்றுக் கொள்ளும் வாய்ப்பு வழங்கப்போவதாக மாயாவதி தெரிவித்துள்ளார். மேலும், கட்சியின் வளர்ச்சியை சகித்துக்கொள்ள முடியாதவர்கள், இது குறித்து அவதூறு பரப்புவதாகவும் கூறினார். குடும்ப அரசியல் சர்ச்சையால், கடந்த ஆண்டு மே மாதம், கட்சி துணைத் தலைவர் பதவியிலிருந்து தனது சொந்த அண்ணனை மாயாவதி நீக்கியது குறிப்பிடத்தக்கது.
Tags:    

மேலும் செய்திகள்