சபரிமலைக்கு சென்ற இலங்கை பெண் : ஐயப்பனை தரிசிக்க முடியாமல் திரும்பினார்

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு மேலும் ஒரு பெண் செல்ல முற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-01-04 05:27 GMT
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு மேலும் ஒரு பெண் செல்ல முற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 46 வயதான அந்த இலங்கை பெண், மாதவிடாய் நின்று போனதற்கான மருத்துவ சான்றிதழை சமர்ப்பித்துள்ளார். அதை பரிசோதித்த மாற்று உடையில் இருந்த போலீசார் பலத்த பாதுகாப்புடன், கோயில் படி வரை அழைத்து சென்றனர். ஆனால் கோயில் ஊழியர்கள், அந்த பெண்ணை, தரிசனம் செய்ய விடாமல் திருப்பி அனுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்