மும்பையில் கூடுதலாக 2 மெட்ரோ ரயில் திட்டங்கள்

மும்பை மாநகரில் பயணிகள் வசதிக்காக, கூடுதலாக 2 மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டியுள்ளார்.

Update: 2018-12-18 12:51 GMT
மும்பை மாநகரில் பயணிகள் வசதிக்காக, கூடுதலாக 2 மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டியுள்ளார். 

இதனையடுத்து, தானே - பின்வன்டி- கல்யாண் மற்றும் தஹிசர் -மிரா -பஹ்யான்டர் இடையே, விரைவில் மெட்ரோ ரயில் பணிகள் துவங்கப்பட உள்ளது. அடிக்கல் நாட்டிய பிறகு விழாவில் உரையாற்றிய பிரதமர் மோடி, இந்தியாவின் கனவை நனவாக்க, மும்பை, தானே போன்ற நகரங்கள் பெரிதும் உதவுவதாக குறிப்பிட்டார். முன்னதாக சிட்கோ வீட்டு வசதி திட்டத்தின் கீழ், 41 ஆயிரம் கோடி மதிப்பிலான, திட்டங்களை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.
Tags:    

மேலும் செய்திகள்