ஒரு லட்சம் வழக்குகளில் தீர்ப்பு அளித்து நீதிபதி சாதனை

அலகாபாத் உயர்நீதிமன்ற மூத்த நீதிபதி சுதிர் அகர்வால், ஒரு லட்சத்து 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகளில் தீர்ப்பு அளித்து, நீதித்துறை வரலாற்றில் மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளார்.

Update: 2018-12-13 09:29 GMT
அலகாபாத் உயர்நீதிமன்ற மூத்த நீதிபதி சுதிர் அகர்வால், ஒரு லட்சத்து 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகளில் தீர்ப்பு அளித்து,  நீதித்துறை வரலாற்றில் மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளார். கடந்த 2005-ம் ஆண்டு அக்டோபர் மாதம் நீதிபதி ஆனதில் இருந்து சிவில், குற்றவியல், வரி விவகாரம், மேல்முறையீடு என அனைத்துவிதமான வழக்குகளிலும் அவர் தீர்ப்பு வழங்கியுள்ளார். அயோத்தி வழக்கில் கடந்த 2010-ம் ஆண்டு தீர்ப்பு அளித்த அமர்வில் சுதிர் அகர்வாலும் இடம் பெற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
Tags:    

மேலும் செய்திகள்