சபரிமலையில் பக்தர்களுக்கு நேரக்கட்டுப்பாடு - கேரள உயர்நீதிமன்றம் கண்டனம்

சபரிமலையில் ஏற பக்தர்களுக்கு நேரக்கட்டுப்பாடு விதித்த விவகாரம் தொடர்பாக அம்மாநில காவல் துறைக்கு கேரள உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

Update: 2018-11-19 13:53 GMT
சபரிமலையில் ஏற பக்தர்களுக்கு நேரக்கட்டுப்பாடு விதித்த விவகாரம் தொடர்பாக அம்மாநில காவல் துறைக்கு கேரள உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. சபரிமலையில் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையும்,  இரவு 9 மணி முதல் அதிகாலை 2 மணி வரையும் பக்தர்கள் மலையேற தடை விதிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக வழக்கை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம், சபரிமலையில் அனைத்து நேரங்களிலும் பக்தர்கள் ஏறுவதற்கு அனுமதிக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்