டிராய் கட்டுப்பாட்டுக்குள் வாட்ஸ்அப், பேஸ்புக்...

தகவல்களை பரிமாறிக்கொள்ளும் வாட்ஸ்அப், பேஸ்புக், கூகுள் உள்ளிட்ட இணையதள பயன்பாட்டை, மத்திய தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையத்தின் கீழ் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, அதன் தலைவர் ஆர்.எஸ். சர்மா தெரிவித்துள்ளார்.

Update: 2018-11-13 06:32 GMT
தகவல்களை பரிமாறிக்கொள்ளும் வாட்ஸ்அப், பேஸ்புக், கூகுள் உள்ளிட்ட இணையதள பயன்பாட்டை, மத்திய தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையத்தின் கீழ் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, அதன் தலைவர் ஆர்.எஸ். சர்மா தெரிவித்துள்ளார். தற்போது அதற்கான ஆலோசனைகள் நடைபெற்று வருவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், இன்னும் 6 மாதத்தில் இவை நடைமுறைக்கு கொண்டு வரப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். இணையதள பயன்பாட்டை வழங்கும் நிறுவனங்கள் இடையிலான கட்டணம் வேறுபாடுகளைக் களையவும், இணையதள சமநிலையை ஏற்படுத்தவும், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Tags:    

மேலும் செய்திகள்