"விலை உயர்வுக்கு, ரூபாய் மதிப்பு சரிந்து வருவதே காரணம்" - தர்மேந்திர பிரதான்

பெட்ரோல், டீசல் விலை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வரப்படும் என, மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

Update: 2018-09-08 02:39 GMT
பெட்ரோல், டீசல் விலை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வரப்படும் என, மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
ஓடிசா மாநிலம் புவனேஸ்வரில் பேசிய  அவர், பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவடைந்தது வருவதே முக்கியக் காரணம் என்றார்.இதனால் மக்கள் பிரச்சினைகளை சந்திப்பதை ஏற்றுக்கொள்கிறேன் என்று கூறிய அவர், பெட்ரோல், டீசல் உற்பத்தி செய்யும் ஈரான், வெனிசுலா உள்ளிட்ட நாடுகள், உற்பத்தியை அதிகரிப்பதாக ஏற்கனவே கூறியும், அது நடைமுறைக்கு வரவில்லை என்று தெரிவித்தார்
Tags:    

மேலும் செய்திகள்