பணமழையால் நனைந்த நாட்டுப்புற பாடகர்

குஜராத் மாநிலம் சூரத்தில் நடந்த, நாட்டுப்புற பாடகர் பிரிஜ்ராஜ் காத்வியின் பக்தி இசை நிகழ்ச்சி

Update: 2018-06-11 07:13 GMT
குஜராத் மாநிலம் சூரத்தில் நடந்த, நாட்டுப்புற பாடகர் பிரிஜ்ராஜ் காத்வியின் பக்தி இசை நிகழ்ச்சியின்போது, அவரை பார்வையாளர்கள், பணமழையால் நனைய வைத்தனர். அவரது பாடல் மற்றும் இசையால் ஈர்க்கப்பட்ட பார்வையாளர்கள், பணத்தை வாரி இறைத்து, தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதேபோல், கடந்த 8-ம் தேதி அகமதாபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியிலும், பணம் வாரி இறைக்கப்பட்டது. லட்சக்கணக்கில் சேர்ந்த இந்தப் பணத்தை, விலங்குகளின் நலனுக்கு செலவிட இருப்பதாக அவர் தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்