"ஷங்கருடன் லைகா நிறுவனம் பேச்சுவார்த்தை" - லைகா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல்

இந்தியன் 2 பட பிரச்சினை தொடர்பாக இயக்குனர் ஷங்கருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக லைகா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

Update: 2021-09-02 11:19 GMT
இந்தியன் 2 படத்தை முடித்து கொடுக்காமல் வேறு படங்களை இயக்க ஷங்கருக்கு தடை விதிக்க கோரி, லைகா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.

இந்த மனு, தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, லைகா நிறுவனம் மற்றும் சங்கர் தரப்பில் தனிப்பட்ட முறையில் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகவும்,

பிரச்சினைக்கு தீர்வு காணும் முயற்சி தீவிரமாக நடைபெற்று வருவதால், 4 வார கால அவகாசம் வழங்க வேண்டும் என லைகா தரப்பில் தெரிவிக்கபட்டது.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை 4 வாரத்திற்கு  தள்ளி வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்