நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீசார் விசாரணை

சென்னை சாலிகிராமத்தில் உள்ள, நடிகர் விஜய் வீட்டில், வெடிகுண்டு இருப்பதாக, மர்மநபர் ஒருவர், மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2020-07-05 08:34 GMT
சென்னை சாலிகிராமத்தில் உள்ள, நடிகர் விஜய் வீட்டில், வெடிகுண்டு இருப்பதாக, மர்மநபர் ஒருவர், மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று நள்ளிரவின் போது, காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு வந்த மிரட்டலை அடுத்து விஜய் வீட்டில் சோதனை நடந்தது. வெடிகுண்டு நிபுணர்கள் நடத்திய சோதனையில் மிரட்டல் புரளி என கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, மிரட்டல் விடுத்த நபர் யார் என, போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், விழுப்புரம் மாவட்டம் கூனிமேடு குப்பம் பகுதியை சேர்ந்த புவனேஸ்வர் எனும் மனநலம் பாதிக்கப்பட்டவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர் ஏற்கனவே இது போல் பலமுறை மிரட்டல் விடுத்தவர் என்பது ம் குறிப்பிட்ட தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்