எனக்கு 4 வயதில் பாலியல் கொடுமை நடந்தது - பூ, மரியான் படங்களில் நடித்த பார்வதி மேனன் வேதனை

எனக்கு 4 வயதில் பாலியல் கொடுமை நடந்தது - பூ, மரியான் படங்களில் நடித்த பார்வதி மேனன் வேதனை

Update: 2018-11-01 06:47 GMT
தமிழில்  பூ, மரியான், உத்தம வில்லன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ள பார்வதி மேனன், தான் நான்கு வயதிலேயே பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பார்வதி மேனன், "தனக்கு நேர்ந்த பாலியல் தொல்லையை புரிந்து கொள்ளவே, 17 வருடங்கள் ஆனதாக குறிப்பிட்டார். அந்த சம்பவம் குறித்து அப்போது பேச முடியவில்லை என்றும், அது தனக்கு பெரும் போராட்டமாக இருந்ததாகவும் பார்வதி மேனன் தெரிவித்தார். அந்தக் காலக்கட்டத்தில், தனது பெற்றோர் உறுதுணையாக இருந்ததாகவும் அவர் தெரிவித்தார். 
Tags:    

மேலும் செய்திகள்