இனவெறி தாக்குதலில் பாதிக்கப்பட்ட நடிகை

ஆஸ்திரேலியாவின் சிட்னி விமான நிலையத்தில் பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி இனவெறி தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2018-09-24 13:07 GMT
ஆஸ்திரேலியாவின் சிட்னி விமான நிலையத்தில் பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி இனவெறி தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிட்னியில் இருந்து மெல்போர்ன் செல்ல வேண்டிய ஷில்பாவை, விமான நிலைய பெண் அதிகாரி ஒருவர் சோதனையிட்டுள்ளார். அப்போது தன் நிறத்தை கூறி அந்த அதிகாரி மோசமாக நடந்து கொண்டதாகவும், இதன் காரணமாக தான் விமானத்தை தவற விட்டதாகவும் ஷில்பா தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்