நடிகர் பிரகாஷ்ராஜ் மீது வழக்குப் பதிவு: பெங்களூரு பெருநகர நீதிமன்றம் உத்தரவு

இந்துக்களின் மனதை புண்படுத்தும் விதமாக பேசியதாக நடிகர் பிரகாஷ்ராஜ் மீது வழக்கு பதிவு செய்ய பெங்களூரு பெருநகர நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

Update: 2018-08-31 06:46 GMT
இந்துக்களின் மனதை புண்படுத்தும் விதமாக பேசியதாக நடிகர் பிரகாஷ்ராஜ் மீது வழக்கு பதிவு செய்ய பெங்களூரு பெருநகர நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. அதன்படி, அவர் மீது அனுமந்தநகர் போலீசார் நேற்று முன்தினம் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

இந்த புகார் தொடர்பாக விரைவில் பிரகாஷ்ராஜிடம் போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. சிவமோகாவில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் பிரகாஷ்ராஜ், பசுக்கள் மற்றும் பசுக்களின் கோமியம் பற்றி தெரிவித்த கருத்து இந்துக்களின் மனதை புண்படுத்தும் விதமாக இருந்ததாக, கிரண் என்ற வழக்கறிஞர் புகார் அளித்திருந்தார்.


Tags:    

மேலும் செய்திகள்