இங்கிலாந்தில் உயிரிழப்பு தொடர்ந்து அதிகரிப்பு - நாள் ஒன்றுக்கு 1 லட்சம் பேருக்கு மேல் சோதனை

இங்கிலாந்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் அங்கு ஒரே நாளில் 621 பேர் உயிரிழந்துள்ளனர்.
இங்கிலாந்தில் உயிரிழப்பு தொடர்ந்து அதிகரிப்பு - நாள் ஒன்றுக்கு 1 லட்சம் பேருக்கு மேல் சோதனை
x
ஐரோப்பாவில் கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றான இங்கிலாந்தில் 24 மணி நேரத்தில் 621 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்தனர். இதனையடுத்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 28 ஆயிரத்து 131 ஆக அதிகரித்துள்ளது. இங்கிலாந்தில் கொரோனா பரிசோதனை வேகம் எடுத்துள்ளதையடுத்து,  நாள் ஒன்றுக்கு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரையிலும் 1 லட்சத்து 82 ஆயிரத்து 260 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் உயிரிழந்தவர்களில் 25 பேருக்கு உடல்நிலையில் எந்த மருத்துவ பிரச்சனைகளையும் இதற்கு முன்னர் எதிர்கொள்ளாதவர்கள் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்