கொரோனா : ஒலிம்பிக் போட்டி நடக்குமா? - விரைவில் ஆலோசனை நடத்த ஒலிம்பிக் கமிட்டி

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒலிம்பிக் போட்டிகளை ஒத்திவைக்கலாமா என ஒலிம்பிக் கமிட்டி ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
x
100 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள கொரோனாவால் , லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு இன்னும் 4 மாதங்களே உள்ள நிலையில் , கொரோனா தாக்கத்தால் ஒலிம்பிக் தகுதி சுற்று போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதே நிலை நீடிக்கும் பட்சத்தில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளை ஒத்தி வைக்க வாய்ப்புள்ளது. விரைவில் இது குறித்து ஒலிம்பிக் கமிட்டி ஆலோசனை நடத்த உள்ளதாகவும் , ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் போட்டிகளை ஒத்திவைக்கலாம் என்றும் கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்