மசூத் அசாரை விடுதலை செய்ததா பாகிஸ்தான் அரசு? - இந்திய உளவுத்துறைக்கு கிடைத்த தகவலால் அதிர்ச்சி

புல்வாமா தாக்குதலுக்கு காரணமாக இருந்த மசூத் அசாரை பாகிஸ்தான் அரசு மறைமுகமாக விடுதலை செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மசூத் அசாரை விடுதலை செய்ததா பாகிஸ்தான் அரசு? - இந்திய உளவுத்துறைக்கு கிடைத்த தகவலால் அதிர்ச்சி
x
கடந்த பிப்ரவரி மாதம் நடந்த புல்வாமா தாக்குதல் மற்றும் பதன்கோட் தாக்குதல் சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்டவர் ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசார். இந்தியா தொடர்ந்து வலியுறுத்தியதால் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக ஐ.நா.சபை அறிவித்தது. இதையடுத்து மசூத் அசாரின் சொத்துகளை முடக்கிய பாகிஸ்தான் அரசு அவரை சிறையில் அடைத்தது. இந்த நிலையில் மசூத் அசாரை பாகிஸ்தான் அரசு மறைமுகமாக விடுதலை செய்துள்ளதாக இந்திய உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்