"காஷ்மீர் பிரச்சினை இந்தியாவின் உள்நாட்டு விவகாரம்" - ஐநாவுக்கான இந்திய தூதர் திட்டவட்டம்

காஷ்மீர் பிரச்சினை முற்றிலும் இந்தியாவில் உள்நாட்டு விவகாரம் என்று ஐநாவுக்கான இந்திய தூதர் சையத் அக்பருதீன் கூறினார்.
காஷ்மீர் பிரச்சினை இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் - ஐநாவுக்கான இந்திய தூதர் திட்டவட்டம்
x
காஷ்மீர் பிரச்சினை முற்றிலும் இந்தியாவில் உள்நாட்டு விவகாரம் என்று ஐநாவுக்கான இந்திய தூதர் சையத் அக்பருதீன் கூறினார். ஐநா பாதுகாப்பு சபை கூட்டம் முடிந்ததும் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காஷ்மீர் விவகாரத்தில் சர்வதேச தலையீடு தேவையில்லை என்று குறிப்பிட்டார்.  இந்தியாவின் நடவடிக்கை எதுவும் இந்தியாவுக்கு வெளியே பாதிப்புகளை ஏற்படுத்தும் வகையில் இல்லை என்றும், மனித உரிமைகளை காப்பதில் இந்தியாவுக்கு யாரும் சொல்லித்தர தேவையில்லை என்றும் கூறினார். செய்தியாளர் சந்திப்பில் கேள்வி எழுப்பிய பாகிஸ்தான் பத்திரிகையாளர்களிடம் சையத் அக்பருதீன் கை குலுக்கி பாராட்டிய நிகழ்வு சர்வதேச அளவில் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்