யாழ்.பல்கலைக்கழக மாணவர்களை விடுவிக்க கோரிக்கை -நூற்றுக்கும் மேற்பட்டோர் போராட்டம்
யாழ். பல்கலைக்கழக மாணவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.
யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 3ஆம் தேதி நடைபெற்ற தேடுதல் நடவடிக்கையின்போது, விடுதலை புலிகள் இயக்கம் தொடர்பான வீடியோ பதிவுகள் மற்றும் இனப்படுகொலை தொடர்பான பதாதைகள் உள்ளிட்டவை, அங்குள்ள மாணவர் ஒன்றிய அலுவலக அறையிலிருந்து மீட்கப்பட்டன. இதனையடுத்து 2 மாணவர்கள் உள்ளிட்ட 3 பேர், பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், பல்கலைக்கழக மாணவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.
Next Story