யாழ்.பல்கலைக்கழக மாணவர்களை விடுவிக்க கோரிக்கை -நூற்றுக்கும் மேற்பட்டோர் போராட்டம்

யாழ். பல்கலைக்கழக மாணவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.
யாழ்.பல்கலைக்கழக மாணவர்களை விடுவிக்க கோரிக்கை -நூற்றுக்கும் மேற்பட்டோர் போராட்டம்
x
யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 3ஆம் தேதி நடைபெற்ற தேடுதல் நடவடிக்கையின்போது, விடுதலை புலிகள் இயக்கம் தொடர்பான வீடியோ பதிவுகள் மற்றும் இனப்படுகொலை தொடர்பான பதாதைகள் உள்ளிட்டவை, அங்குள்ள மாணவர் ஒன்றிய அலுவலக அறையிலிருந்து மீட்கப்பட்டன.  இதனையடுத்து 2 மாணவர்கள் உள்ளிட்ட 3 பேர், பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், பல்கலைக்கழக மாணவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.


Next Story

மேலும் செய்திகள்