கல்முனை சாய்ந்தமருதில் தற்கொலைப்படை தாக்குதல்
6 குழந்தைகள், 6 பெண்கள் உட்பட 15 பேர் சடலங்கள் கண்டெடுப்பு
இலங்கையில் கல்முனை சாய்ந்தமருதுபகுதியில் நேற்றிரவு நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் இதுவரை 15 சடலங்கள் வரை கண்டெடுக்கப்பட்டுள்ளது.சாய்ந்தமருது பகுதியில் அதிரடிப் படையினர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட போது, மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதற்கு பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்தனர். துப்பாக்கிச்சூட்டின் இடையே 3 இடங்களில் தற்கொலை படை தாக்குதலும் நடைபெற்றது. இதனையடுத்து அப்பகுதியில் ஒரு வீட்டில் இருந்து குண்டு தயாரிப்பதற்கான வெடிபொருட்களை பாதுகாப்பு படையினர் கைபற்றினர். இந்நிலையில் தாக்குதல் நடைபெற்ற அப்பகுதியில் இருந்து 6 குழந்தைகள், 6 பெண்கள், 3 ஆண்கள் என 16 சடலங்கள் இன்று கண்டெக்கப்பட்டது. மேலும் தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்களின் நடமாட்டம் அப்பகுதியில் இருக்கலாம் என்பதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
Next Story