கல்முனை சாய்ந்தமருதில் தற்கொலைப்படை தாக்குதல்

6 குழந்தைகள், 6 பெண்கள் உட்பட 15 பேர் சடலங்கள் கண்டெடுப்பு
கல்முனை சாய்ந்தமருதில் தற்கொலைப்படை தாக்குதல்
x
இலங்கையில் கல்முனை சாய்ந்தமருதுபகுதியில் நேற்றிரவு நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் இதுவரை 15 சடலங்கள் வரை கண்டெடுக்கப்பட்டுள்ளது.சாய்ந்தமருது பகுதியில் அதிரடிப் படையினர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட போது, மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதற்கு பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்தனர். துப்பாக்கிச்சூட்டின் இடையே 3 இடங்களில் தற்கொலை படை தாக்குதலும் நடைபெற்றது. இதனையடுத்து அப்பகுதியில் ஒரு வீட்டில் இருந்து குண்டு தயாரிப்பதற்கான வெடிபொருட்களை பாதுகாப்பு படையினர் கைபற்றினர். இந்நிலையில் தாக்குதல் நடைபெற்ற அப்பகுதியில் இருந்து 6 குழந்தைகள், 6 பெண்கள், 3 ஆண்கள் என 16 சடலங்கள் இன்று கண்டெக்கப்பட்டது. மேலும் தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்களின் நடமாட்டம் அப்பகுதியில் இருக்கலாம் என்பதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்