இலங்கை அதிபர் தேர்தலில் போட்டி - கோத்தபய ராஜபக்சே உறுதி
இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிடப்போவதாக அந்நாட்டின் பாதுகாப்புத் துறை முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்சே கூறியுள்ளார்.
கொழும்பில் "ராய்ட்டர்ஸ்" செய்தி நிறுவனத்திடம் பேசிய அவர் , இலங்கையில் இஸ்லாமிய தீவிரவாத நடவடிக்கைகளை முறியடிப்பேன் என்று உறுதிபட தெரிவித்தார். உள்நாட்டுபோரின்போது உருவாக்கப்பட்ட புலனாய்வு அமைப்பை கலைக்காமல் இருந்திருந்தால் குண்டு வெடிப்பு தாக்குதல்களை தடுத்து நிறுத்தியிருக்கலாம் என்றும் கூறியுள்ளார். கண்காணிப்பு குறைபாடுகளால்தான் தற்போதைய பதட்டநிலை உருவாகியுள்ளது என்றும், அதிபர் தேர்தலில் தான் போட்டியிடுவது 100 சதவீதம் உறுதி என்றும் கோத்தபாய ராஜபக்ச திட்டவட்டமாக தெரிவித்தார்.
Next Story