தாக்குதல் நடத்தினால் நிச்சயம் பதிலடி கொடுப்போம் : புல்வாமா தாக்குதல் பற்றி பாகிஸ்தான் பிரதமர் கருத்து

இந்தியா தாக்குதல் நடத்தினால், பாகிஸ்தான் பதிலடி கொடுக்க தயங்காது என அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.
தாக்குதல் நடத்தினால் நிச்சயம் பதிலடி கொடுப்போம் : புல்வாமா தாக்குதல் பற்றி பாகிஸ்தான் பிரதமர் கருத்து
x
புல்வாமா தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்துள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், தங்கள் மீது ஆதாரம் இல்லாமல் குற்றஞ்சாட்டுவதாக தெரிவித்துள்ளார். தாக்குதலுக்கு பாகிஸ்தான் துணை போனதாக, ஆதாரம் இருந்தால் அதனை சமர்பிக்க வேண்டும் என்றும், அதன் படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.  இது தவிர தங்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தினால், அதற்கு பதிலடி கொடுக்கவும் தயங்க மாட்டோம் என்றும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்