"ராஜபக்ஷேவுடன் கூட்டணி சேர வேண்டாம்" - சிறிசேனாவை கண்டித்த சந்திரிகா
இலங்கையின் முன்னாள் அதிபரான சந்திரிகா, ராஜபக்ஷேவுடன் கூட்டணி சேர வேண்டாம் என சிறிசேனாவிற்கு வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையின் முன்னாள் அதிபரான சந்திரிகா, ராஜபக்ஷேவுடன் கூட்டணி சேர வேண்டாம் என சிறிசேனாவிற்கு வலியுறுத்தியுள்ளார். சிறிசேனாவின் சுதந்திரா கட்சியை சேர்ந்த சந்திரிகா, இது தொடர்பாக சிறிசேனாவிற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், இலங்கையில் 51 நாட்களாக நீடித்த அரசியல் குழப்பங்களுக்கு சிறிசேனாவே காரணம் என்றும், இனிமேல் ராஜபக்ஷேவுடன் கூட்டு சேர வேண்டாம் எனவும் கண்டித்துள்ளார். மேலும், சுதந்திரா கட்சியின் எதிர்காலம் கருதி நேரில் சந்தித்து பேச விரும்புவதாகவும் அவர் தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
Next Story