எதிரிகளுக்கு அடைக்கலம் தந்து பாகிஸ்தான் பாதுகாக்கிறது - அமெரிக்க அதிபர் டிரம்ப்

எதிரிகளுக்கு அடைக்கலம் தந்து அவர்களை பாதுகாப்பதாக பாகிஸ்தான் மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டி உள்ளார்.
எதிரிகளுக்கு அடைக்கலம் தந்து பாகிஸ்தான் பாதுகாக்கிறது - அமெரிக்க அதிபர் டிரம்ப்
x
அமெரிக்காவில் இந்த ஆண்டிற்கான முதல் அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்ற அந்நாட்டு அதிபர் டிரம்ப், பாகிஸ்தானுடன் நல்லுறவை கடைபிடிக்கவே அமெரிக்கா விரும்புவதாக கூறினார். ஆனால், பாகிஸ்தான் எதிரிகளுக்கு அடைக்கலம் தந்து அவர்களை பாதுகாக்கிறது. இதனால் பாகிஸ்தான் உடன் நல்லுறவை கடைபிடிக்க முடியவில்லை என்றார். அமெரிக்காவிடம் பாகிஸ்தான் நேர்மையாக இல்லாததால் தான், அதற்கு வழங்கப்பட்டு வந்த 1.3 பில்லியன டாலர் நிதி நிறுத்தப்பட்டதாக கூறிய அவர், புதிதாக பொறுப்பேற்றுள்ள பாகிஸ்தான் அரசுடன் பேச்சு வார்த்தை நடத்த விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
 


Next Story

மேலும் செய்திகள்