"ரனில் மீதான குற்றச்சாட்டுகளை அம்பலப்படுத்துங்கள்" - அதிபர் சிறிசேனாவுக்கு தமிழ் எம்.பி. சவால்

சிறிசேனாவுக்கு எதிராக கண்டியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று பேசிய தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், கடந்த மாதம் 26ம் தேதி தொடங்கிய தனது ஆட்டத்தை, அதிபர் சிறிசேனா முடிந்தால் தொடரலாம் எனவும் அதற்கு விரைவில் முடிவு கட்டி வீட்டுக்கு விரட்டியடிப்போம் எனவும் ஆவேசமாக கூறினார்.
ரனில் மீதான குற்றச்சாட்டுகளை அம்பலப்படுத்துங்கள் - அதிபர் சிறிசேனாவுக்கு தமிழ் எம்.பி. சவால்
x
சிறிசேனாவுக்கு எதிராக கண்டியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று பேசிய தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், கடந்த மாதம் 26ம் தேதி தொடங்கிய தனது ஆட்டத்தை, அதிபர் சிறிசேனா முடிந்தால் தொடரலாம் எனவும் அதற்கு விரைவில் முடிவு கட்டி வீட்டுக்கு விரட்டியடிப்போம் எனவும் ஆவேசமாக கூறினார். புத்தகம் எழுதப்போவதாக கூறும் சிறிசேனா, அந்த புத்தகத்தில் எழுதப்போவதை, மக்களிடம் சென்று கூறலாம் எனவும் மனோ கணேசன் சவால் விடுத்தார். இலங்கை அரசியல் சாசனப்படி, 2020ம் ஆண்டு வரை நாடாளுமன்ற பொதுத் தேர்தல் நடத்த முடியாது என்பதால், அதிபர் தேர்தலை முன்கூட்டியே எதிர்கொள்ள சிறிசேனா தயாரா எனவும் சவால் விடுத்தார். 

Next Story

மேலும் செய்திகள்