என்னை சீண்டினால் விபரீதமாகிவிடும் - ரனில் தரப்புக்கு அதிபர் சிறிசேன கடும் எச்சரிக்கை

இலங்கை நாடாளுமன்றத்தில் குழப்பத்தை ஏற்படுத்த முயன்றால் பல வித்தியாசமான விபரீதங்களை சந்திக்க நேரிடும் என அதிபர் சிறிசேன கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
என்னை சீண்டினால் விபரீதமாகிவிடும் - ரனில் தரப்புக்கு அதிபர் சிறிசேன கடும் எச்சரிக்கை
x
இலங்கை சுதந்திர கட்சியின் செயற்குழு கூட்டத்தில் பேசிய அதிபர் சிறிசேன, எதிர்வரும் நாடாளுமன்ற கூட்டத்தில்,  பெரும்பான்மையை தங்கள் தரப்பு நிரூபிக்கும் எனக் கூறினார். இதனை எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது எனக் கூறிய அவர், பல வித்தைகளை காட்டி ஆட்சியை கைப்பற்ற ரனில் விக்ரமசிங்கே முயற்சிப்பதாக குற்றம்சாட்டினார். இந்த விவகாரத்தில் தம்மை சீண்டினால், வித்தியாசமான விபரீதங்களை சந்திக்க நேரிடும் என ரனில் தரப்புக்கு அதிபர் சிறிசேன கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் குழப்பத்தை ஏற்படுத்த முயன்றால், தம்மிடம் உள்ள ஆதாரங்களை வெளியிட்டு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கவும் தயாராக இருப்பதாகவும் சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்